ஜனவரி, மார்ச் மாதங்களில் பருவத் தேர்வு- அமைச்சர் அன்பில் மகேஷ்..!

ஜனவரி, மார்ச் மாதங்களில் பருவத் தேர்வுகள் நடத்தப்படும் -அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தான் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் படிக்க ஏதுவாக பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டிருந்தன. இதற்கிடையில் பருவமழை காரணமாக  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால், பாடத்திட்டங்கள் குறைக்கப்படுமா..?  அல்லது தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா..? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.  இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,  தமிழக அரசு ஏற்கனவே முடிவு செய்தது போல் ஜனவரி, மார்ச் மாதங்களில் பருவ தேர்வுகள் நடத்தப்படும்.

அதுவரை எவ்வளவு பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தெரிந்து கொண்டு அதன் பிறகு பொதுத்தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

author avatar
murugan