#Election Update:ஒரே மேடையில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறார் சீமான்

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் அணல் பறக்க தொடங்கியுள்ளது.திமுக மற்றும் அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை இன்னும் முடிவு பெறாத நிலையில்,நாம் தமிழர் கட்சியின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்க உள்ளது.

ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் இன்று நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.இதில் தமிழக சட்டசபை தேர்தலுக்காக 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிவிக்கிறார் சீமான்.இந்த வேட்பாளர்கள் அறிவிப்பில் அறிவிப்பில் 50% பெண்கள் 50% ஆண்கள் இடப்பெற உள்ளனர்.

author avatar
Dinasuvadu desk