டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு சீல்..!

டெல்லியில் உள்ள அமலாக்கத்துக்குறை அலுவலகத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அந்த அலுவலகத்திற்கு 2 நாளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமடைந்து வருகின்றது. இந்நிலையில், டெல்லியில் ஒரே நாளில் 1330 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 26,334 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் மூத்த அதிகாரிகள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், டெல்லி அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு 2 நாளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.