பள்ளிகள் 4 -ஆம் தேதி திறக்க வேண்டும்-தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை

  • தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 
  • பள்ளிகளை ஜனவரி 4 திறந்திட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் சார்பில் மாநில தேர்தல் ஆணையர் அவர்களுக்கு கடிதம் ஓன்று அனுப்பப்பட்டுள்ளது.அந்த கடிதத்தில் , தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை பணி ஜனவரி 2 -ஆம் தேதி நள்ளிரவு வரை நடைபெற வாய்ப்பு உள்ளதால் பள்ளிகளை ஜனவரி 3ஆம் தேதிக்கு பதிலாக ஒருநாள் தள்ளிவைத்து ஜனவரி 4 திறந்திட வேண்டும். 2020ஆம் ஆண்டின் முதல்வேலை நாளை புத்துணர்வோடு தொடங்க ஏற்ற சூழல் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தல் காரணமாக  தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 2 ஆம் தேதிக்கு பதிலாக 3ஆம் தேதி திறக்கப்படும் .உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை  ஜனவரி 2ஆம் தேதி நடப்பதால் ஜனவரி 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.