தமிழகத்தில் நாளை முதல் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஒரு வருட காலமாக போக்குவரத்து, பள்ளி கல்லூரிகள், தொழிற்சாலைகள் என அனைத்துமே முடக்கப்பட்ட நிலையில் தான் இருந்தது. கடந்த சில மாதங்களாக தான் மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசு சில தளர்வுகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது. இந்நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து பல கட்டமாக ஆலோசனைகள் நடத்தப்பட்டு வந்தது. பொது தேர்வு நடைபெற இருப்பதை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வந்த நிலையில், அண்மையில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வைக்கலாம் என இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. அதன்படி வருகிற செவ்வாய்க் கிழமை அதாவது நாளை முதல் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளிக்கு மாணவர்கள் வர வேண்டும் என்று கட்டாயப்படுத்த கூடாது எனவும், பெற்றோர்களின் விருப்பப்படி ஒப்புதல் கடிதம் பெற்ற மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும் எனவும் பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் ஆகியவற்றை எப்பொழுதம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் போன்ற பாதுகாப்புவழிகாட்டுதலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இதை கண்காணிப்பதற்காக கல்வித்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.
Election2024 : 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் இன்று (ஏப்ரல்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதுகிறது. நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் 34-வது போட்டியாக இன்று லக்னோ…
ஐபிஎல் 2024 : கடைசி ஓவரில் ரோஹித் சர்மா செட் செய்த ஃபீல்டால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது என்று ரசிகர்கள் அவரை கொண்டாடி…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…
Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …