#Breaking : அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன்

அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன்

ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இதனை தொடர்ந்து ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே சிபிஐ தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழக்கப்பட்டது.இதனிடையே சிதம்பரத்திற்கு  ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.அவைகள் பின்வருமாறு ….

  • ஆதாரங்களை கலைக்கும் முயற்சியிலோ அல்லது சாட்சியங்களை மாற்றும்  முயற்சியிலோ ஈடுபடக்கூடாது.
  • வழக்கு தொடர்பாக ஊடக சந்திப்பில் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்க கூடாது மற்றும் அறிக்கையும் வெளியிடக்கூடாது.
  • அனுமதி இல்லாமல் வெளிநாட்டிற்கு செல்லக்கூடாது
  • சிதம்பரத்துக்கு 2 நபர்கள் ஜாமீன் உத்தரவாதம் அளிக்க வேண்டும் .