மும்பை ஐ.ஐ.டி நடத்திய ஆய்வில் சில அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ உட்பட பல வங்கிகள் ஜீரோ பேலன்ஸ் அல்லது சேமிப்பு வங்கி வைப்புக் கணக்குகள் தொடர்பான சில சேவைகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கின்றன. இது ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறுவதாகும்.
மும்பை ஐ.ஐ.டி மேற்கொண்ட ஆய்வின் படி, இந்த கணக்குகளிலிருந்து குறிப்பிட்ட நான்கு முறைக்கு அதிகமாக பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் எஸ்.பி.ஐ ரூ.17.70 வசூலிப்பதாக ஆய்வில் கூறப்படுகிறது. கடந்த 2015 முதல் 2020 வரை ஐந்து ஆண்டுகளில், எஸ்பிஐ அடிப்படை வங்கி டெபாசிட் கணக்குகளில் இருந்து சுமார் ரூ.300 கோடி சேவைக் கட்டணமாக வசூல்செய்துள்ளது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதில், 2018-19 ஆம் ஆண்டில் ரூ.72 கோடி சேவைக் கட்டணமும், 2019-20-ல் ரூ .158 கோடியாகவும் சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டது. நாட்டின் இரண்டாவது பெரிய அரசு வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி ஐந்து ஆண்டுகளில் அடிப்படை வங்கிக் கணக்கு வைத்திருக்கும் 3.9 கோடி வாடிக்கையாளா்களிடமிருந்து ரூ .9.9 கோடியையும் வசூலித்துள்ளது.
IPL 2024: டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் வேதனை தெரிவித்தார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…
Phase 2 Election: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…
Kenya floods: கென்யாவின் பல பகுதிகளில் வெள்ளம் அடித்துச் சென்றதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதராபாத் அணியும், பெங்களுரு அணியும் மோதுகிறது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 41-வது போட்டியாக…
School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…
IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…