சாத்தான்குளம் கொலை வழக்கு – 5 காவலர்களிடம் சிபிஐ விசாரணை

சாத்தான்குளம் கொலை வழக்கு – 5 காவலர்களிடம் சிபிஐ விசாரணை

சாத்தான்குளம் கொலை வழக்கில் 5 காவலர்களிடம் விசாரணையை தொடங்கியது.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை முதலில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ,உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோரை வருகின்ற 16-ஆம் தேதி வரை  சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி அளித்துள்ளது மதுரை முதன்மை நீதிமன்றம் .வருகின்ற 16-ஆம் தேதி மாலை 5 பேரையும்  ஆஜர்படுத்தவும் உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்.

இந்நிலையில்  சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 5 போலீசாரிடம் விசாரணையை தொடங்கியது சிபிஐ. மதுரை சிபிஐ அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Join our channel google news Youtube