சாத்தான்குளம் வழக்கு..! 4 காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி..!

சாத்தான்குளம் வழக்கு..! 4 காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி..!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான தலைமைக் காவலா் முருகன், காவலா்கள் முத்துராஜா, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோா் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனா். இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, காவலர் முருகன், தாமஸ், பிரான்சிஸ் , முத்து ராஜா  ஆகியோர் ஜாமீன் கோரிய மனுவை  நீதிபதி பாரதிதாசன் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் கொலை வழக்கில், காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்பட 10 காவலர்கள்  கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் உள்ளனர்.

சமீபத்தில், சிறப்பு உதவி ஆய்வாளா் பால்துரை கொரோனாவால் உயிரிழந்தாா். இதைத்தொடர்ந்து, காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்பட 9 போ் மீது குற்றப்பத்திரிகையை  சிபிஐ மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan
Join our channel google news Youtube