சாத்தான்குளம் விவகாரம்.! மேலும் 5 காவலர்கள் பணியிடை நீக்கம்.!

சாத்தான்குளம் விவகாரம்.! மேலும் 5 காவலர்கள் பணியிடை நீக்கம்.!

சாத்தான்குளம் கொலை சம்பவம் தொடர்பாக மேலும் 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த ஜெயராஜ் மற்றும்  பென்னிக்ஸ் ஆகிய இருவரும் உயிரிழந்த வழக்கு தொடா்பாக ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை உள்ளிட்ட 10 போலீஸாா் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், மேலும் 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துறை, தலைமை காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து, ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

author avatar
murugan
Join our channel google news Youtube