தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக சசிகாந்த் செந்தில் நியமனம்!

தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக சசிகாந்த் செந்தில் நியமனம்!

தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக ஊடகம், முன்னணி அமைப்புகள் மற்றும் துறைகள், பயிற்சி முகாம் நடத்துவது குறித்த பணிகள் சிறப்பாக அமைந்திட, அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவின் ஒப்புதலோடு, தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், காங்கிரஸ் கட்சியின் முன்னணி அமைப்புகளை ஒருங்கிணைக்கும் மகத்தான பொறுப்பினை அளித்த தலைமைக்கு எனது நன்றி என்றும் கடைக்கோடி தொண்டர்களுடன் மக்கள் நலனை முன்னிறுத்தி எங்களது பயணம் தொடரும் எனவும் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube