#BREAKING: ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் மல்க மரியாதை..!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் வி.கே.சசிகலா மரியாதை

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,  இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் மற்றும் அதிமுக தொண்டர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் நினைவிடத்திற்கு அதிமுக கொடி பொருந்திய காரில் சென்ற வி.கே.சசிகலா மலர்த்தூவி கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார்.

author avatar
murugan