அந்த சம்பவத்தால் திராவிடர்கள் அனைவருக்கும் தலைகுனிவு.! சசிகலா கண்டனம்.!

மின் ஊழியர் ஒருவர், புகார் கொடுக்க வந்த நபரை மின் மோட்டார் கொண்டு தாக்க முயன்ற சம்பவத்திற்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். 

காலை முதல் இணையத்தில் தமிழக அளவில் மிகவும் வைரலாக  பார்க்கப்பட்ட வீடியோ என்றால்,  அது தர்மபுரி மாவட்ட பாலக்காடு பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டதை பற்றி புகார் கொடுக்க ஒரு பெண் வந்துள்ளார்.

அந்த பெண்ணை, மின் ஊழியர் குப்புராஜ் என்பவர் மின் மோட்டாரை கொண்டு தாக்க முயற்சித்த வீடியோ தான். அதன் பின் உடனடி நடவடிக்கையாக அந்த மின் ஊழியரை சஸ்பெண்ட் செய்து மின் வாரியம் உத்தரவிட்டது.

இது தொடர்பாக, வி.கே.சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். திராவிட ஆட்சியில், இப்படி ஒரு சம்பவம் நடப்பது, திராவிடர்களாகிய நமக்கு பெரும் தலைகுனிவு. இது போன்ற அவலநிலைகளை அதிமுக ஆட்சியில் பார்க்க முடிந்ததா? என தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment