துரத்திவந்த இளைஞனுக்காக காரை நிறுத்தி செல்பீ எடுத்த சசிகலா..!

துரத்திவந்த இளைஞனுக்காக காரை நிறுத்தி செல்பீ எடுத்த சசிகலா..!

காரில் பலத்த பாதுகாப்புடன் சென்றுகொண்டிருந்த சசிகலாவை இளைஞன் ஒருவர் துரத்தி வர, காரை நிறுத்தி அவருடன் சசிகலா செல்பீ எடுத்து கொண்டுள்ளார்.

சொத்துகுவிப்பு வழக்கில் சிறை சென்றிருந்த சசிகலாவின் சிறைத்தண்டனை நிறைவடைந்து விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று சசிகலா  திரும்புகிறார். இந்நிலையில், சென்னையிலுள்ள ஒரு கோவிலுக்கு சென்று ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு பலத்த பாதுகாப்பதுடன் வந்து கொண்டிருந்த சசிகலாவின் காரை இளைஞன் ஒருவன் பின்தொடர்ந்து செல்பீ எடுப்பதற்காக துரத்தி வந்துள்ளார்.

உடனடியாக அங்கு பாதுகாப்புக்காக காரில் வந்தவர்கள் மற்றும் காவல்துறையினர் அந்த இளைஞனை அங்கிருந்து துரதியுள்ளனர். ஆனால், சசிகலா தனது காரை நிறுத்தி அந்த இளைஞனுடன் செல்பீ எடுத்துவிட்டு அதன் பின் அங்கிருந்து கடந்து சென்றுள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube