உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமர் மோடி பெயர்

அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மொட்டேரா கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் மோடி பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்று முடிந்தது. டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாம் டெஸ்ட் போட்டி, இன்று குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் மைதானத்தில் பகல் – இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

இதனிடையே இன்று மொடேராவில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.இந்த அரங்கத்தில் 1.10 லட்சம் ரசிகர்கள் கிரிக்கெட் போட்டிகளை கண்டு ரசிக்கலாம். பழைய விளையாட்டரங்கம் 2016-ஆம் ஆண்டு இடிக்கப்பட்ட போது,54,000 பேர் அமரும் வசதி அதில் இருந்தது. புதிய அரங்கத்திற்கான அடிக்கல் 2018-ஆம் ஆண்டு குஜராத் கிரிக்கெட் சங்கத்தால் நாட்டப்பட்டது.இந்நிலையில் இந்த உலகின் மிகப் பெரிய மைதானத்துக்கு  பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.