முடிவுக்கு வருகிறது சரவணன் – மீனாட்சி சீரியல் !ரசிகர்கள் அதிர்ச்சி !

சீரியல்கள் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஒரு முக்கியமான விஷயம். வீட்டில் என்ன வேலை செய்கிறார்களோ இல்லையோ, சீரியல்களை மட்டும் பார்ப்பதை தவிர்க்க மாட்டார்கள்.

அந்த வகையில் ரசிகர்களின் மனதில் பெரிய இடம் பிடித்திருக்கும் சீரியல் சரவணன்-மீனாட்சி. இந்த சீரியலில் அண்மையில் வந்த சில காட்சிகளை மக்கள் மீம்ஸ்கள் போட்டு மிகவும் கலாய்த்துவிட்டனர். இதுகுறித்து நடிகர் ரியோ கூறுகையில், இப்படி ஒரு காட்சி வரப்போகிறது என்பது எனக்கே தெரியாது. மீம்ஸ்கள் பார்க்கும் போது அதை இயக்குனரிடம் காட்டி சிரிப்பேன் என்றார்.

அடுத்து வெள்ளித்திரை பற்றி ரியோ பேசும்போது, இப்போது கொஞ்சம் சீரியஸாக கதை கேட்க ஆரம்பித்திருக்கேன். தற்போது ஒரு கதையையும் ஓகே செய்து வைத்திருக்கிறேன். சீரியல் முடிவதற்காக வெயிட்டிங் என்று பேசியுள்ளார்.

அவரின் பேட்டியை கேட்ட ரசிகர்கள் அப்போது சரவணன்-மீனாட்சி முடிகிறதா என்று ஷாக் ஆகியுள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment