நாட்டாமை படத்தில் சரத்குமார் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.!

சரத்குமார் நடிப்பில் வெளியான நாட்டாமை படத்தில் முதலில் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தது மலையாள சூப்பர் ஸ்டாரை என்று கூறப்படுகிறது.

கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1994ல் வெளியான திரைப்படம் ‘நாட்டாமை’. இந்த படத்தில் சரத்குமார், சங்கவி, மீனா, விஜயகுமார், குஷ்பு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்போதே இந்த படம் பாக்ஸ் ஆஃபிஸில் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது..

இந்த நிலையில் தற்போது இந்த படத்தினை குறித்த புது தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சரத்குமார் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வைக்க மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியிடம் தான் அஅணுகியதாகவும் , பெரிய நாட்டாமையாக விஜயகுமார் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் இயக்குநர் பாரதிராஜாவிடம் தான் கேட்டதாகவும் கூறப்படுகிறது. பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெரிய நாட்டாமையாக நடித்தது குறிப்பிடத்தக்கது.