காஞ்சனா வை தொடர்ந்து மீண்டும் லாரன்ஸுடன் இணைந்த சரத்குமார்..!

காஞ்சனா வை தொடர்ந்து மீண்டும் லாரன்ஸுடன் இணைந்த சரத்குமார்..!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ருத்ரன் படத்தில் நடிகர் சரத்குமார் இணைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

நடிகரும், இயக்குனரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அடுத்ததாக பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் ருத்தரன் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் இசையமைப்பளார் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ருத்ரன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக நடிகர் ராகவலரன்ஸ் அறிவித்திருந்தார்.

இந்த திரைப்படத்தை அவரே இயக்கவுள்ளார். இந்த ருத்தரன் திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் லாரன்ஷிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் தேதி தொடங்கியது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் பிரபல நடிகரான சரத்குமார் இணைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள். இதனால் மேலும் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. ஏற்கனவே நடிகர் லாரன்ஸ் மற்றும் சரத்குமார் காஞ்சனா திரைப்படத்தில் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube