பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றதற்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த அம்ரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, நேற்று சண்டிகரில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், அம்மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வானார்.
இதனைத் தொடர்ந்து,பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் சரண்ஜித் சிங் சன்னி இன்று பதிவியேற்றார். சண்டிகரில் உள்ள ராஜ்பவனில் சரண்ஜித்துக்கு அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில்,பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்பு என்பது ஒரு தேர்தல் வித்தைப்போல் தெரிவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் ஏஎன்ஐ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற சரண்ஜித் சிங் சன்னியை நான் வாழ்த்துகிறேன். அவர் முன்னதாகவே முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.ஆனால்,பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு சன்னி முதல்வராக நியமிக்கப்பட்டிருப்பது ஒரு தேர்தல் வித்தை போல் தெரிகிறது.
அடுத்த பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் தலித் அல்லாதவரின் தலைமையில் போட்டியிடப்படும் என்பதையும் ஊடகங்கள் மூலம் அறிந்தேன். இதன் பொருள் காங்கிரஸ் இன்னும் தலித்துகளை முழுமையாக நம்பவில்லை. பஞ்சாபில் சிரோமணி அகாலி தால் (எஸ்ஏடி-பிஎஸ்பி) மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி இடையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் பயப்படுகிறது”,என்று கூறியுள்ளார்.
Love Brain Disorder : சீனாவில் 18 வயதான கல்லூரி மாணவிக்கு 'லவ் ப்ரைன்' எனும் வித்தியாசமான நோய் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். சீன பத்திரிகையின் அறிக்கை சீனாவில்…
Sunrisers Hyderabad : ஹைதராபாத் அணி பேட்டிங் பற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
Nitin Gadkari : தேர்தல் பிரசாத்தின் போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர் நிதின்…
RBI: கோடாக் மகிந்திரா வங்கி மீது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் வங்கியில் 5-ஆவது பெரிய வங்கியாக கோடாக்…
Air conditioner- குழந்தைகளுக்கு ஏசி பயன்படுத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை இப்பதிவில் காணலாம். கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை போக்கவும், வெப்ப காற்றில் இருந்து …
M.G.Ramachandran : பிரபல நடிகை ஒருவர் செய்த விஷயம் எம்.ஜி.ஆரை ரொம்பவே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் எல்லாம் அவருடைய படங்களின்…