மூன்று ஆண்டுகள் கழித்து வெளியாகும் சந்தானத்தின் திரைப்படம்.?

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சர்வர் சுந்தரம் திரைப்படம் ஓடிடியில் வெளியிடுவதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. 

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவரது நடிப்பில் டிக்கிலோனா திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. படத்திலிருந்து அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்குகள் திறந்தவுடன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து  இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் சபாபதி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தினை தயாரிப்பாளர் ரமேஷ் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது 3 ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த சந்தானத்தின் சர்வர் சுந்தரம் திரைப்படத்தை இந்த ஆண்டு தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால், சர்வர் சுந்தரம் திரைப்படத்தை   ஓடிடியில் வெளியிடுவதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். கெனன்யா ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்இசையமைத்துள்ளார். மேலும்,  இந்த படத்தில் மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷ், வைபவி ஷிந்திலியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பல முறை ரிலீஸ்க்கு தள்ளி போன இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.