மீண்டும் தூசிதட்டப்படும் சுந்தர்.சியின் பிரமாண்ட ‘சங்கமித்ரா’.!? என்ன நடந்தது?

மீண்டும் தூசிதட்டப்படும் சுந்தர்.சியின் பிரமாண்ட ‘சங்கமித்ரா’.!? என்ன நடந்தது?

சுந்தர்.சி இயக்க தேனாண்டாள் தயாரிக்க பிரமாண்ட சரித்திர பின்னணி கொண்ட படமாக உருவாக இருந்து கைவிடப்பட்ட சங்கமித்ரா மீண்டும் உருவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்.

பாகுபலி எனும் பிரமாண்ட திரைப்படம் வெளியான புதிதில், நம்ம கோலிவுட்டில் இருந்து பிரமாண்டமாக அறிவிக்கப்பட்ட பிரமாண்ட சரித்திர பின்னணி கொண்ட திரைப்படம் சங்கமித்ரா. இதில் அனைவருக்கும் ஆச்சர்யம் என்னவென்றால் படத்தின் இயக்குனர் சுந்தர்.சி என அறிவிப்பு வெளியானது தான்.

அவர் குறைந்த பட்ஜெட்டில் காமெடி கமர்சியல் படங்களை எடுத்து தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் பார்த்துக்கொடுப்பவர். அவர் எப்படி இந்த பிரமாண்ட படத்தை கையாள போகிறார் என்பதே.

அதிலும் படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடிக்க உள்ளனர் என கூறப்பட்டது. தேனாண்டாள் பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்க , இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், நிதி பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.

தற்போது வெளியான தகவல் என்னவென்றால், மீண்டும் சங்கமித்ரா உருவாக வேலைகள் நடைபெற்று வருகிறதாம். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாம். ஆர்யாவுக்கும், ஜெயம் ரவிக்கும் தற்போது நல்ல மார்க்கெட் உள்ளதால் படம் உருவாக அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. விரைவில் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை,

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube