முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் மணல் திருட்டு..!-வாகனத்தை துணிச்சலுடன் சிறைப்பிடித்த கிராமமக்கள்..!

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் மணல் திருட்டு..!-வாகனத்தை துணிச்சலுடன் சிறைப்பிடித்த கிராமமக்கள்..!

எடப்பாடி அருகே இரவு நேரத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்களை கிராமமக்கள் தடுத்து பிடித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் வேப்பம் பட்டி கிராம பகுதியில் சுமார் 560 ஏக்கர் பரப்பளவில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இதில் மணல் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த ஏரியில் இரவு நேரத்தில் மணல் திருட்டு நடந்துகொண்டு வருகிறது.

இதே போன்று நேற்றும் நள்ளிரவு நேரத்தில் இந்த ஏரியில் இருந்து மணல் எடுத்துள்ளனர். அப்போது அங்கு திரண்ட கிராம மக்கள் கூட்டத்தால், வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பித்து சென்றுள்ளனர்.

இது குறித்து கூறிய கிராம மக்கள், பலமுறை மணல் திருட்டு நடப்பது குறித்து புகார் அளித்துள்ள நிலையில் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெயரைக்கொண்டு திருட்டு நடப்பதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், இந்த மணல் திருட்டை தடுத்து நிறுத்தி இயற்கை வளத்தை பாதுக்காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் கூறியுள்ளனர்.

Join our channel google news Youtube