கொடுமணல் அகழாய்வு : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கொடுமணல் அகழாய்வு : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பொருட்களின் வயதை அறியும் கார்பன் சோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொடுமணல் தொடர்பாக நெல்லை காமராஜ் என்பவரும் , புதுக்கோட்டையை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று விசாரித்தது.

அப்பொழுது,கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழ்  மொழியை சார்ந்தவை, ஆனால் இது தொடர்பான பணிக்கு சமஸ்கிருதம் அறிந்தவர்கள் ஏன் பணியில் இருக்கிறார்கள் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.பின்னர் கொடுமணல் அகழாய்வில் கிடைத்த 12 பொருட்களின் வயதை அறியும் கார்பன் சோதனை செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Join our channel google news Youtube