திருமணம் ஆகிய உடன் சினிமாவிற்கு முழுக்கு போடும் அல்லது தேவையான குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்கும் நடிகைகள் மத்தியில் வித்தியாசம் காட்டுகிறார் நடிகை சமந்தா.
இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்தபோதும் இன்னும் அதே பிசியில் சினிமாவில் கதாநாயகியாக தொடர்ந்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் ராம்சரணுடன் ஜோடியாக நடித்து வெளிவந்த திரைப்படம் ரங்கஸ்தலம். இப்படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் சமந்தா கலக்கி இருந்தார். இப்படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் சமந்தா தனது நீளமான முடியை வெட்டி புது லுக்கில் சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது காணப்பட்டார். அந்த லுக் புதியதாக உருவாகவிருக்கும் யு – டர்ன் திரைப்படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் பதிப்பிற்க்காக என தெரிவித்தனர் சினிமா வட்டாரங்கள் .