தமிழகம் முழுவதும் சலூன் கடைகள் மூடல்…!

மருத்துவ சமூகத்தினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் 5% இட ஒதுக்கீடும், சமூகப் பாதுகாப்பும் வழங்க வலியுறுத்தி இன்று 5 லட்சம்  சலூன் கடைகளை மூடி போராட்டம் நடத்தப்படுகிறது.

சமீபத்தில், தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இணை செயலாளர் ஞானசேகரன் அவர்கள் தலைமை வகித்தார்.

இந்நிலையில், கூட்டத்தில் மருத்துவ சமூகத்தினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் 5% இட ஒதுக்கீடும், சமூகப் பாதுகாப்பும் வழங்க வலியுறுத்தி 5 லட்சம்  சலூன் கடைகளை மூடி 26-ம் தேதி போராட்டம் நடத்த போவதாக முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து, இன்று தமிழகம் முழுவதும் காலை 9 மணி முதல் 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. மேலும், தங்களது சமூக மக்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு, தனி சட்ட பாதுகாப்பு வழங்க  கோரிக்கை விடுத்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.