#BREAKING: சேலம் சிலிண்டர் விபத்து- முதல்வர் நிவாரண உதவி அறிவிப்பு..!

தாதகாப்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண அறிவிப்பு.

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து உயிரிழந்த  5 குடும்பங்களுக்கு முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார். அதன்படி உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். எரிவாயு சிலிண்டர் வெடி விபத்தில் பத்மநாதன், தேவி, கார்த்திக் ராம், எல்லம்மாள், ராஜலட்சுமி ஆகிய 5 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan