8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதித்தற்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்.
சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதித்தற்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவசர வழக்காக கருதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கக்கோரி 8 வழிச்சாலை திட்ட மேலாளர் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும், பணிகள் பாதியில் விடப்பட்டுள்ளதால் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க திட்ட மேலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். 8 வழிச்சாலை திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில், 6 மாதங்களாக மேல்முறையீடடு மனு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.