சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டம்; உச்சநீதிமன்றத்தில் மனு.!

8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதித்தற்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்.

சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதித்தற்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவசர வழக்காக கருதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கக்கோரி 8 வழிச்சாலை திட்ட மேலாளர் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும், பணிகள் பாதியில் விடப்பட்டுள்ளதால் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க திட்ட மேலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். 8 வழிச்சாலை திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில், 6 மாதங்களாக மேல்முறையீடடு மனு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்