கொரோனா பாதித்த சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதி

கொரோனா பாதித்த சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதி

சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வீட்டிலேயே அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,

அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. மருத்துவ ஆலோசனைபேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவேன். கவனமாக இருங்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் உலகக் கோப்பை வெற்றியின் 10 வது ஆண்டு விழாவில் அனைத்து இந்தியர்களுக்கும், எனது அணியினருக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை கைப்பற்றி சாதனைப் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan
Join our channel google news Youtube