நாளை சட்டப்பேரவை கூட்டம்.. முதல்வர் அசோக் கெலாட் உடன் சச்சின் பைலட் சந்திப்பு.!

ராஜஸ்தான் அரசியல் குழப்பம் முடிந்த நிலையில் முதல்வர் அசோக் கெலாட் உடன் சச்சின் பைலட் சந்திதனர்.

ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில், இன்று காங்கிரஸ் சட்டமன்றக் கூட்டத்தில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள்  மற்றும்  சச்சின் பைலட் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

 முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடி தூக்கி டெல்லியில் முகாமிட்டு இருந்த சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் தனது முடிவை மாற்றி கொண்டு சச்சின் பைலட் கடந்த செவ்வாய் கிழமை ஜெய்ப்பூருக்குத் திரும்பினார்.

ஜெய்ப்பூருக்குத் திரும்பிய பின்னர் சச்சின் பைலட்  முதல் முறையாக முதல்வர் அசோக் கெலாட்டை சந்தித்து பேசினார்.
ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

author avatar
murugan