விளையாட்டில் இதெல்லாம் சகஜம்பா – சச்சின்

விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம்‌ என்று சச்சின் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் தோற்று வெளியேறியது.

இதுகுறித்து பலரும் கருந்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் இந்திய அணி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் “இந்த அரையிறுதி போட்டி எல்லாருக்கும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கும்,ஆனால் இந்த செயல்பாட்டை மட்டும் வைத்து அணியை எடைப்போட முடியாது ” என்று தெரிவித்துள்ளார். மேலும்,”இந்திய அணி நம்பர்.1 இடத்தில் இருந்துள்ளது, எதுவும் ஒரு இரவில் நிகழ்ந்துவிடவில்லை, விளையாட்டில் மேலே போவதும், கீழே இறங்குவதும் சகஜம் , இந்த நேரத்தில் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் ” என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
Aravinth Paraman

Leave a Comment