சபரிமலையில் மகரஜோதியாக காட்சியளித்த ஜயப்பன்..!! கண்டுகளித்த பக்தர்கள்…!!

சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு ஜோதி வடிவே உருவமாக ஐயப்பன் காட்சி அளிப்பது ஐதீகம்.இந்த அற்புதமான  நிகழ்வானது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நிகழும் இந்நிகழ்வானது இந்த வருடத்திற்கான மகரஜோதி பூஜையானது இன்று மாலை அய்யன் பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி வடிவத்தில் காட்சி தருவதை  காண்பதற்காக சரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து நிலையில் இந்த அற்புதமான நிகழ்வானது மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று தேவசம்  போர்டு தெரிவித்தது.

மலைமுழுவதும் ஸ்வாமியே சரணமய்யப்பா என்ற கோஷம் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.பந்தலத்திலிருந்து அய்யனுக்காக ஆபரணப்பெட்டி 3 நாட்கள் நடந்து சபரிமலைக்கு கொண்டுவந்துள்ளனர்.இந்நிலையில் ஜோதி வடிவமாக தன்னை காண வந்த லட்சோபலட்சக்கணக்கான பக்தர்களுக்கு தனது மகரஜோதி வடிவ தரிசனத்தை காட்டி அருள்புரிந்தார் ஹரிஹரசுதன் அய்யப்பன்.

 

author avatar
kavitha

Leave a Comment