காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது..!5வது குற்றவாளி?

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது..!5வது குற்றவாளி?

சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை அதிரடியாக  சிபிசிஐடி கைது செய்துள்ளது.

சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை அதிரடியாக கைது  சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.இவ்வழக்கு

கங்கைகொண்டான் செல்லும் வழியில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்த நிலையில் சாத்தான்குளம் சம்பவத்தில் 5 ஆவது குற்றவாளியாகவும் ஸ்ரீதர் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை முடிந்த நிலையில் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆய்வாளர் ஸ்ரீதர் மீது கொலை, தடயங்களை அழித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தந்தை, மகன் கொலை வழக்கில் இதுவரை 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் இதுவரை  ரகு கணேஷ், பாலகிருஷ்ணன்,முத்துராஜ்,முருகன் என உள்ளிட்ட  4 காவல் ஆய்வளார்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் இன்று சிலர் கைதாக வாய்ப்பு உள்ளதாக சிபிசிஐடி ஐஜி சங்கர்  தகவல் தெரிவித்துள்ளார்.

author avatar
kavitha
Join our channel google news Youtube