#Breaking: ரஷ்யாவின் “ஸ்புட்னிக் V” தடுப்பூசி 92% வெற்றி.!

ரஷ்யாவின் “ஸ்பூட்னிக் வி” என்ற கொரோனா தடுப்பூசி இடைக்கால சோதனை முடிவுகளின்படி, கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாப்பதில் 92% வெற்றி பெற்றுள்ளது என்று ரஷ்யா இன்று தெரிவித்துள்ளது.

கமலேயா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட “ஸ்புட்னிக் வி” அடினோவைரஸ் திசையன் சார்ந்த தடுப்பூசி ஆகும். இதனை, ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்துடன் இணைந்து ஆகஸ்ட் 11 அன்று பதிவு செய்யப்பட்டது.

தற்போது, இந்த ‘ஸ்பூட்னிக் வி’ கொரோனா தடுப்பூசி இடைக்கால சோதனையின்படி, கொரோனாவிலிருந்து 92% மக்களைப் பாதுகாப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும், வருகின்ற செப்டம்பர் மாதத்தில் பெரிய அளவிலான சோதனை தொடங்குவதற்கு முன்பே ஒப்புதல் வந்த போதிலும், ரஷ்யா ஸ்பட்னிக் V- ஐ ஆகஸ்ட் மாதத்தில் பொது பயன்பாட்டிற்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது.

இதற்கிடையில், இந்த ஸ்பூட்னிக் வி யின் 2 மற்றும் 3வது கட்ட மருத்துவ பரிசோதனை நடத்துவதற்கு இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட உலகளாவிய மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டிஸுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது .

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.