ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றுள்ளவர் ஊருக்குள் வருவதாக வதந்தி பரப்பிய இருவர் கைது!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று குறித்த வதந்தியான செய்திகளும் பரவிய வண்ணம் உள்ளது. அந்த வகையில், ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே தாசப்பகவுண்டன்புதூரில் கொரோனா தொற்றுள்ளவர் ஊருக்குள் வருவதாக வதந்தி பரப்பியுள்ளனர்.
இதனையடுத்து,  வதந்தி பரப்பியதாக வெள்ளியங்கிரி, விமல்ராஜ் ஆகிய இருவரை கைது செய்து பங்களாபுதூர் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.