எம்மாடி…! ஒரு நாள் மொய் விருந்தில் ரூ.7,00,00,00 வசூல்…!

தஞ்சாவூர் சுற்றி உள்ள பகுதிகளில் சமூகத்தில் பின் தங்கியுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக தொடங்கப்பட்டது தான் மொய்விருந்து விழா.பின்னர் அது மெல்ல மெல்ல வளர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தை  சுற்றி உள்ள  பகுதிகளிலும் பரவியது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  வடகாடு கிராமத்தில் நேற்று கிருஷ்ணமூர்த்தி என்பவர் மொய் விருந்திற்காக 50 ஆயிரம் பத்திரிக்கை அடித்து  கொடுத்து உள்ளார்.
இதை அடுத்து  நேற்று  நடந்த விருந்தில் ஆயிரம் கிலோ ஆட்டுக்கறி சமையல் செய்து  ஐந்து ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர் இந்த மொய்  விருந்தில் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணமூர்த்தி வைத்த மொய்விருந்தில் நேற்று  ரூ.7 கோடி ரூபாய் வசூல் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பணத்தை வைத்துக் கொண்டு தன்னுடைய வியாபாரத்தை தொடங்க  போவதாக அவர் கூறினார்.

 

author avatar
murugan