காய்கறி ஏற்றி சென்ற லாரியில் ரூ.51 லட்சம் பணம் பறிமுதல்.!

மைசூரில் இருந்து காய்கறி ஏற்றுக் கொண்டு வந்த லாரியில் ரூ.51 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும், தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கும், பிற மாநிலங்களிலிருந்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் வருகின்றது.

இந்நிலையில், மைசூரில் இருந்து காய்கறி ஏற்றுக் கொண்டு வந்த லாரியை தமிழக எல்லையான கக்கனல்லா சோதனைச் சாவடியில் காவலத்துறையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த லாரியில் ரூ.51 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.