30 நாட்கள் தூங்குபவர்களுக்கு ரூ.26,500 சன்மானம்! – மலேசிய ஆராய்ச்சியாளர்கள்!

மலேசியா பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வுக்காக 30 நாட்கள் தூங்குபவர்களுக்கு ரூ.26,500 சன்மானம் வழங்கப்படும் என தகவல்.

ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது வாழ்க்கையின் விலைமதிப்பற்ற அனுபவங்களில் ஒன்றாகும். ஏனெனில் நீங்கள் உங்களை எவ்வாறு புதுப்பித்து புத்துயிர் பெறுவதற்கு தூக்கம் மிக அவசியமாக இருக்கிறது. எனவே, நீங்கள் தூங்குவதை விரும்புபவராக இருந்தால், உங்களுக்காக ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மலாயா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வைத் திட்டமிட்டனர். அதில் பங்கேற்பாளர்கள் தூங்க வேண்டும் என்பது தான் நிபந்தனை.

மலேசியா பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வுக்காக 30 நாட்கள் தூங்குபவர்களுக்கு ரூ.26,500 சன்மானமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் 20 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் உடல் எடை கட்டுப்பாடு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நபர்கள் ஒரு மாதம் தூங்கும் வீட்டில் தங்கி கண்காணிக்கப்படுவார்கள். பங்கேற்பாளர்கள் தூங்கும் நிலையின் எதாவது கண்டறியப்பட்டால், அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள்.

தன்னார்வலர்கள் தூங்கும் வீட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதற்கு முன்பு ஸ்கிரீனிங் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஒருமுறை அங்கீகரிக்கப்பட்டதும், தனிநபர்கள் தூங்கும் வீட்டில் தூங்குவதற்கு மட்டுமே செல்ல வேண்டும்.  பங்கேற்பாளர்கள் 30 இரவு தூக்கத்தை முடித்த பிறகு RM 1,500 பெறுவார்கள். இருப்பினும், இந்த சுவாரசியமான விளம்பரம் வைரலான பிறகு அதிகமான எதிர்வினை காரணமாக இப்பதிவு நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுபோன்று கடந்த 2017 ஆம் ஆண்டில், பிரான்சின் விண்வெளி மருத்துவம் மற்றும் உடலியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, பங்கேற்பாளர்களை மூன்று மாதங்கள் படுக்கையில் தூங்குவதற்கு ஊக்குவித்தது, அவர்கள் மைக்ரோ கிராவிட்டியின் விளைவுகளை ஆய்வு செய்தனர். 16,000 யூரோக்கள் (சுமார் ரூ.11.2 லட்சம்) சம்பளத்துடன் கொடுக்கப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

இதுக்கு தான் ஹர்திக் வேணும்! குஜராத் படுதோல்வியை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா!!

ஐபிஎல் 2024 : ஹர்திக் பாண்டியா இல்லாதது குஜராத் அணியை பாதிக்கிறது என ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியும், டெல்லி…

43 mins ago

T20 உலகக்கோப்பை அணியில் இவர்களுக்கு வாய்ப்பா? ஆலோசனையில் நடந்தது என்ன?

t20wc: ஐபிஎல் தொடரை கருதாமல் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இந்த 10 வீரர்கள் இடம்பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று…

53 mins ago

பூத் சிலிப் வரவில்லையா.? வாக்குச்சாவடியை கண்டறிய எளிய வழி இதோ…

Election2024 :  இணையத்தின் வாயிலாக வாக்காளர்கள், தங்கள் பூத் விவரங்களை தெரிந்துகொள்ளும் வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகள் உட்பட 21 மாநிலங்களில்…

54 mins ago

மக்களே எச்சரிக்கை…இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும்.!

Weather Update: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீவீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…

56 mins ago

ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்தது…இன்றைய நிலவரம் இதோ.!

Gold Price: கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்த நிலையில், இன்று விலை சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…

1 hour ago

தத்தளிக்கும் துபாய்…2வது நாளாக சென்னை டூ எமிரேட்ஸ் விமான சேவை ரத்து.!

Dubai: துபாயில் பெய்த கனமழையால் சென்னையில் இருந்து செல்லும் எமிரேட்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழையால் வளைகுடா நாடுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. துபாயின் சில பகுதிகளில்…

1 hour ago