தூய்மை பணியாளர்களுக்கு ரூ.2,500 மதிப்பூதியம் – தமிழக அரசு

சென்னை காவல் எல்லைக்குட்ப்பட்ட பகுதிகளில் பணிபுரியும் ஒவ்வொரு தூய்மைப் பணியாளருக்கு சிறப்பினமாக ரூ.2,500 மதிப்பூதியம்.

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கொரோனா தடுப்பு பணியில் தன்னலம் கருதாமல், அயராது களப்பணி ஆற்றிவரும் சுமார் 33,000 நிரந்திர மற்றும் தற்காலிக தூய்மைப் பணியாளர்களின் சேவையை முதல்வர் பழனிசாமி பாராட்டியுள்ளார். அவர்களின் இந்த அறிய சேவையை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் வகையில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்ப்பட்ட பகுதிகளில் பணிபுரியும் ஒவ்வொரு தூய்மைப் பணியாளருக்கு சிறப்பினமாக ரூ.2,500 மதிப்பூதியம் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்