நெப்போலியன் சார்பில் ரூ 25 லட்சம் கொரோனா நிதி..!!

முதல்வரிடம் நடிகர் நெப்போலியன் சார்பில், ரூ 25 லட்சம் கொரோனா நிதிக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக,பல மாநிலங்களில் இரவு நேர மற்றும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,கொரோனா தடுப்பு பணிகளுக்காக மக்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன் சார்பில் ஜீவன் டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிட்டட் மற்றும் ஜீவன் அறக்கட்டளை சார்பாக  சுரேஷ், அசோக், திருமதி, வசந்தி பாபு, திரு. சீத்தாராமன் கொரோனா நிவாரண பணிக்காக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து 25 லட்சம் ரூபாய்கான காசோலையை வழங்கியுள்ளனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.