ரூ 2000 திட்டம்…1 1/2 கோடி பேருக்கு வழங்க வேண்டும்…கிருஷ்ணசாமி கோரிக்கை…!!

  • 2000 வழங்குவதில் முறைகேடுகள் நடைபெறுகின்றது 
  • வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கும் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் சூழலில் மாநில மற்றும் தேசிய கட்சிகள் தங்களின் தேர்தல் பிரசாரம் மற்றும் கூட்டணி குறித்த வியூகங்கள் , பேச்சுவாரத்தை என தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் அதிமுக + பாமக + பிஜேபி கூட்டணி அமைக்கின்றது .

மேலும் தமிழக அரசு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு திட்டங்களை அறிவித்தது.குறிப்பாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படுமென்றும் இந்த திட்டம் 60 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழக கட்சிகளின் நிறுவனர் கிருஷ்ணசாமி கூறுகையில் , வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் தயாரிப்பதில் பல குறைபாடுகள் இருக்கின்றது. அரசு 60 லட்சம் குடும்பம் என்பதை அதிகரிக்க வேண்டும் . மேலும் இந்த திட்டத்தை ஒன்றரை கோடி வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் குடும்பத்திற்கு வழங்க வேண்டுமென்று தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment