கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும்-அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்.அவர் வெளியிட்ட அறிவிப்பில்,சென்னையில் ஓரிரு நாட்களில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் .முதல் கட்டமாக 100 பேருந்துகள் வாங்கப்பட்டு சென்னையில் 80 பேருந்துகளும் தலா 10 பேருந்துகள் கோயம்புத்தூர் மற்றும் மதுரையிலும் இயக்கப்படும்.

கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும். அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.