ஐந்து குழந்தைகள் பெற்ற கத்தோலிக்க தம்பதிகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் சீரோ மலபார் கத்தோலிக்க ஆலயத்தின் பாலா மறைமாவட்டம் சார்பில் குடும்ப ஆண்டு கடைபிடிக்கப்படுகிறது. மத்திய கேரளாவை சேர்ந்த பாலா மறைமாவட்ட ஆயர் ஜோசப் கல்லரங்காட் மற்ற ஆலயங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, அனைத்து ஆலயங்களிலும் குடும்ப ஆண்டு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதன் பின்னர் அனைத்து ஆலயங்களுக்கு உட்பட்டு வசிக்கும் கத்தோலிக்க குடும்பங்களில் 5 அல்லது அதற்கு மேல் குழந்தைகள் உடைய பெற்றோருக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.
மேலும், அந்த குழந்தைகளுக்கு சலுகைகளாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மறை மாவட்டத்தின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் இலவச கல்வியும், மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர்.
இது பற்றி பாலா மறைமாவட்ட குடும்ப நல இயக்கத்தின் பாதிரியார் ஜோசப் குற்றிங்கல் கூறியிருப்பதாவது, கேரளாவில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக இந்த உதவிகள் வழங்கப்படுவதாக கூறியுள்ளார். மாநிலத்தில் 18.38% ஆக இருந்த கத்தோலிக்கர்கள் எண்ணிக்கை தற்போது 14% ஆக குறைந்துள்ளது.
Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான…
Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க்…
Morne Morkel : லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்க்கல் மாயங்க் யாதவின் உடற்தகுதியை குறித்து செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் …
Mumbai Indians : இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது என மனோஜ் திவாரி மும்பை அணியை விமர்சித்து பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட்…
West Bengal : மேற்கு வங்கத்தில் உள்ள நாட்டின் எல்லை வழியாக பலர் ஊடுருவுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளர். மக்களவை தேர்தலின் 7 கட்டங்களிலும்…
Arvind Kejriwal : டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் மே மாதம் 7ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி…