2 போலீசார் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் நிதி – தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு.!

2 போலீசார் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் நிதி – தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு.!

தேர்தல் பணியின்போது விபத்தில் இறந்த 2 போலீசார் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் நிதி வழங்குவதாக சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் அருகே தேர்தல் பணியின்போது விபத்தில் இறந்த 2 போலீசார் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

சமீபத்தில் பேருந்து மோதி பறக்கும்படை வாகனம் கவிழ்ந்ததில் உயிரிழந்த 2 போலீசார் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்எஸ்ஐ கர்ணன் மற்றும் காவலர் பாலசுப்ரமணியம் விபத்தில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடப்படுகிறது.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube