கணக்கில் வராத ரூ.120 கோடி: பால் தினகரனுக்கு சம்மன் அனுப்பிய வருமான வரித்துறை.!

கணக்கில் வராத ரூ.120 கோடி: பால் தினகரனுக்கு சம்மன் அனுப்பிய வருமான வரித்துறை.!

கிருஸ்துவ மத போதகர் பால் தினகரனுக்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இயேசு அழைக்கிறார் நிறுவனத்தின் தலைவரான பால் தினகரனுக்கு சொந்தமான சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலை உள்பட தமிழகத்தில் உள்ள 28 இடங்களில் கடந்த மூன்று நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த வருமானவரித்துறை சோதனையில், கோவையில் உள்ள காருண்யா பலக்லைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆவணங்கள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், கணக்கில் வராத சொத்துக்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்கள் நடைபெற்ற சோதனையில், 5 கிலோ தங்கம், ரூ.120 கோடி கணக்கில் வராத முதலீடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கிருஸ்துவ மத போதகர் பால் தினகரனுக்கு வருமானவரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பால் தினகரன் அடுத்த வாரம் சென்னையில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube