அரசு அப்பள்ளிகளில் செஸ் போட்டிகளை நடத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு – அரசாணை வெளியீடு!

அரசு அப்பள்ளிகளில் செஸ் போட்டிகளை நடத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு – அரசாணை வெளியீடு!

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு செஸ் போட்டிகள் நடத்த ரூ.1 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.

இதுதொடர்பான தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே சதுரங்கம் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் வண்ணம் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறும் மாணவர்கள் சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  இத்திட்டம் ரூ. 1கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் நுண்ணறிவுத் திறன், செயல்பாட்டுத் திறன், ஆளுமைத் திறன் என பல்வேறு திறன்களை சதுரங்கப் போட்டிகளின் வழியே வெளிக்கொணர பள்ளியளவில் தொடங்கி மாவட்ட, மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடத்திடவும். சென்னையில் வரும் ஜீலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ள சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளில் அரசுப் பள்ளி மாணவர்களை பார்வையாளர்களாக பங்கேற்கச் செய்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி அடுத்த மாதம் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. உலக முழுவதுமிருந்து சுமார் 2,000 வீரர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *