வெற்றிபெறுமா ராஜஸ்தான்?? 192 ரன்கள் இலக்காக வைத்தது கொல்கத்தா!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 192 ரன்கள் இலக்காக வைத்தது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

ஐபிஎல் தொடரின் 54 ஆம் போட்டியில் கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் மோதி வருகிறது. துபாய் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்ய, கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கில் – ராணா களமிறங்கினார்கள். இதில் முதல் பந்தில் நிதிஷ் ராணா வெளியேற, கில்ளுடன் ராகுல் திரிபாதி இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடிவந்தனர்.

36 ரன்கள் குவித்து கில் வெளியேற, அவரைதொடர்ந்து ஒரு ரன் கூட அடிக்கலாம் சுனில் நரேன் வெளியேறினார். அவரைதொடர்ந்து களமிறங்கிய இயோன் மோர்கன் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறத்தில் நிதானமான ஆட்டமே தென்பட்டது. இறுதியாக கொல்கத்தா அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் அடித்தது. 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் தற்பொழுது ராஜஸ்தான் அணி களமிறங்கியுள்ளது.