32.2 C
Chennai
Thursday, June 1, 2023

அதானி விவகாரம்..பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள்..! புத்தகத்தை வெளியிட்டது காங்கிரஸ்..!

அதானி விவகாரத்தில் பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள் அடங்கிய...

முதலமைச்சர் ஸ்டாலினுடன் டெல்லி, பஞ்சாப் முதல்வர்கள் சந்திப்பு.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த்...

ஜெயிலர் ஷூட்டிங் ஓவர்…கேக் வெட்டி படக்குழு உடன் கொண்டாடிய ரஜினிகாந்த்.!!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்...

மின்சார வாகன உலகில் களமிறங்கும் ராயல் என்பீல்டு..! வெளியான அசத்தல் அப்டேட்..!

ராயல் என்பீல்டு நிறுவனம் தனித்தன்மை வாய்ந்த மின்சார பைக்குகளை வெளியிட உள்ளது.

இளைஞர்கள் கனவு:

உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் பலரும் பைக் என்று சொன்னாலே உற்சாகம் அடைந்து விடுவார்கள். அதிலும் ராயல் என்பீல்டு (Royal Enfield) பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்வது இளைஞர் பலரின் கனவாக உள்ளது. அதில் பயணம் அனுபவம் மிகவும் அற்புதமாக இருக்கும்.

RoyalEnfield
RoyalEnfield [Image source : The Financial Express]
மின் வாகன தயாரிப்பு:

தற்பொழுது, உலகெங்கும் மின்சார வாகனங்கள் மயமாகி வருவதால் பல இரு சக்கர வாகன நிறுவனங்கள் தற்போது மின் வாகன தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகின்றன. அந்தவகையில் நிறுவனமான ராயல் என்பீல்டு நிறுவனம் தனித்தன்மையுடன் வித்தியாசமான மின்சார மோட்டார் சைக்கிளை உருவாக்கி வருகிறது.

RoyalEnfield 2
RoyalEnfield 2 [Image source : Cycle World]
சிஇஓ கூறியது:

இந்நிலையில், ராயல் என்பீல்டு நிறுவனம் ஏற்கனவே தயாரிப்பு மேம்பாட்டிற்காக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளது. சென்னையை தளமாகக் கொண்ட தயாரிப்பு ஆலையைச் சுற்றி வாகனங்களின் சப்ளையர்/டீலர்களின் ஒரு அமைப்பை நிறுவனம் உருவாக்கி வருவதாக தலைமை நிர்வாக அதிகாரி பி.கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார்.

RoyalEnfield
RoyalEnfield [Image source : Canada Moto Guide]
நிலையான முன்னேற்றம்:

மேலும், மின்சார வாகன உலகில் நாங்கள் நிலையான முன்னேற்றம் அடைந்து வருகிறோம். ராயல் என்பீல்டின் இவி (EV) பயணம் இப்போது டாப் கியரில் உள்ளது என்று என்னால் சொல்ல முடியும். வலுவான ராயல் என்ஃபீல்டு மூலம் தனித்துவமாக வேறுபடுத்தப்பட்ட மின்சார மோட்டார்சைக்கிள்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

Royal Enfield
Royal Enfield [Image source : file image ]
தமிழ்நாட்டில் ராயல் என்பீல்டு:

முன்னதாக, ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம் தமிழ்நாட்டில் 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் எலக்ட்ரிக் வாகன ஆலை அமைக்க திட்டமிட்டு, அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் 60 அடி நிலப்பரப்பில் ராயல் என்பீல்டு எலக்ட்ரிக் ஆலை அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.