இளைஞர்களுடன் இணைந்து கபடி விளையாடிய ரோஜா…!

இளைஞர்களுடன் இணைந்து கபடி விளையாடிய ரோஜா…!

ரோஜா இளைஞர்களுடன் திடீரென்று களத்தில் இறங்கி கபடி விளையாடி உள்ளார்.

நடிகை ரோஜா ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவர். இந்நிலையில், நகரி பகுதியில் நடைபெற்ற கபடி போட்டியை தொடங்கி வைக்குமாறு ரோஜா சென்று இருந்தார்.

அப்போது அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். இவர்களின் வரவேற்பில் உற்சாகமடைந்த ரோஜா இளைஞர்களுடன் திடீரென்று களத்தில் இறங்கி கபடி விளையாடி உள்ளார். ரோஜாவின் இந்த செயல் சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube