ரோஹித் சர்மா அதிரடி வீணானது ! இங்கிலாந்திடம் கடைசிவரை போராடி தோற்ற இந்திய அணி !

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் ,இந்திய அணியும் மோதியது .இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில்நடைபெற்றது .இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார் .
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் , ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக ஜேசன் ராய் , ஜானி பேர்ஸ்டோவ் இருவருமே அடித்தனர்.

இவர்களின் கூட்டணியை பிரிக்க முடியாமல் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் திணறினர். இவர்களின் கூட்டணியில் அணியின் ரன்கள் வெகுவாக உயர்ந்தது.இந்நிலையில் தொடக்க வீரர்கள்  ஜேசன் ராய் , ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் அரைசத்தை நிறைவு செய்தனர்.
பின்னர் இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் வீசிய சுழல் பந்தில் ஜேசன் ராய் 66 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பிறகு ஜோ ரூட் இறங்கினர்.அதிரடியாக விளையாடி வந்த ஜானி பேர்ஸ்டோவ் 109 பந்தில்  111 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.
அடுத்தாக களமிறங்கிய கேப்டன் மோர்கன் 1 ரன்னில் அவுட் ஆனார்.நிதானமாக விளையாடிய ஜோ ரூட் 44 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.இறுதியாக இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் குவித்தது.
 இந்திய அணி பந்து வீச்சில் ஷமி  5 விக்கெட்டை பறித்தார்.338 ரன்கள் இலக்குடன் இந்திய  அணியின் தொடக்க வீரராக கே.எல் ராகுல் ,ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே கே.எல் ராகுல் ரன்கள் எடுக்காமல் விக்கெட்டை இழந்தனர்.பிறகு கேப்டன் கோலி களமிறங்கினர். ரோஹித் சர்மா ,கோலி இருவரும்  கூட்டணியில் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இவர்களின் அதிரடி ஆட்டத்தால் அணியின் எண்ணிக்கை சற்று உயர்ந்தது.நிதானமாகவும் , சிறப்பாகவும் விளையாடி வந்த கேப்டன் கோலி 76 பந்தில் 66 ரன்கள் அடித்து வெளியேறினர். அடுத்த வீரராக ரிஷாப் பந்த் களமிறங்கினர். ரோஹித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் நடப்பு உலகக்கோப்பையில் தனது மூன்றாவது சதத்தை நிறைவு செய்தார் .
சதம் அடித்த சிறிது நேரத்திலே ரோஹித் சர்மா 102 ரன்னில் அவுட் ஆனார்.மத்தியில் களமிறங்கிய ரிஷாப் பந்த் 32 ,ஹார்திக் 45 ரன்களுடன் வெளியேறினர். கடைசிவரை ஆட்டமிழக்காமல் தோனி 42 , கேதார் ஜாதவ் 12 ரன்களுடன் களத்தில் நின்றனர்.  இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 306 ரன்கள் அடித்து 31ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.
 

author avatar
murugan