ரோஹித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்…!!

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது அதன் படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தனர். 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19. 1 ஓவர்களில் 138 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசியத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்களை வீழ்த்திய அமித் மிஸ்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு சென்றது. இந்த நிலையில், இந்த போட்டியில் ஐபி எல்லின் திருத்தப்பட்ட விதிகளின்படி குறிப்பிட்ட கால அளவில் ஓவர்களை வீசி முடிக்காததால் ஐபிஎல் விதிகளை மீறியதாக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.